கையில் பணமில்லாமல் சிக்கி தவிக்கும் பிரபல சீரியல் நடிகை!

கொரோனா நோய் தொற்றால் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கிவிட்டது. இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துவிட்டது.

ஊரடங்கு, நோய் தொற்று என பல விசயங்கள் பலரும் வெளி இடங்களில் சிக்கியுள்ளனர். சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் சிலர் வெளிநாடுகளிலும் முடங்கியுள்ளனர்.

பிரபல ஹிந்தி நடிகையான சாந்தினி பகவானி ஒரு மாதம் கால ஒர்க்‌ஷாப்பில் பங்கெற்க ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கிறார். ஆனால் கொரோனாவால் அவர் அங்கேயே சிக்கி தவிக்கிறாராம். திரும்பி இந்தியா வருவதற்காக டிக்கெட் புக் செய்ய முயன்றபோது அனைத்து விமானங்களும் முடிந்துவிட்டதாம்.

இதனால் இந்த நேரத்தில் அதிக பணம் கொடுத்து டிக்கெட் எடுத்தாலும் சிரமம் தான், பாதுகாப்பு கிடையாது என்பதால் அவர் அங்கேயே ஹோட்டல் அறை எடுத்து தங்கியிருந்தாராம். மேலும் கையில் குறைவாக இருந்ததால் குறைந்த விலையில் தனி வீடு எடுத்து தங்கிவந்தாராம். தற்போது பற்றாக்குறையால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளாராம்.