இந்தியாவில் 29 ஆயிரத்தை தாண்டியது கொரோனா வைரஸ் பாதிப்பு..!

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 3,064,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரசால் 211,537 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 922,387 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

இந்தியாவில் 29,435 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 228,380 லிருந்து 29,435 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 886 லிருந்து 934 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.