குக்கரில் கள்ளச்சாரயம் காய்ச்சிய இளைஞர்கள் கைது.!!

ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில், சாராயம் காய்ச்சுவது எப்படி என்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதும், அவற்றை குடிமகன்கள் தேடி பார்ப்பதும்தான் இப்போதைக்கு டிரண்டிங் ஆகியுள்ளது.

இந்நிலையில், மதுபானக் கடைகளை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பலர் வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி வருகின்றனர்.

திருவள்ளுவர் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியில் சாராயம் காய்ச்சி வி்ற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக விரைந்து சென்ற போலீஸார், அங்கு வீட்டில் குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த இளைஞர்களை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.