தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 5 ஆம் தேதி தொடங்கும் என கூறியிருந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாளை மறுநாள் தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் கேரளா உள்ளிட்ட தென்இந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. மத்திய கிழக்கு,வடமேற்கு, தென்கிழக்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உளது. ஈரோடு, கிருஷ்ணகிரி, நெல்லையில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.