28வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலையில்லாமல் உயர்வையும், குறைவையும் சந்தித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். மேலும், விலை உயரும் போது ரூபாய் கணக்கிலும், குறையும் போது பைசா கணக்கிலும் குறைந்து வருகிறது.

கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் பெட்ரோல் டீசலின் விலையை மேலும் அதிகரித்தது. இந்த நிலையில், உலகை ஆட்டி வைத்தவரும் கரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக அணைத்து நாடுகளும் பொருளாதார ரீதியிலான பிரச்சனையை சந்திக்க உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது.  சென்னையில் 28 ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.75.54க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 68.22க்கும் விற்பனை செய்யப்படுகிறது.