கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யாராய் பேசிய வசனத்தை பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ளார்.
அதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அப்பெண்ணை ஐஸ்வர்யாராயைப் போல இருப்பதாக புகழ்ந்து வருகின்றனர்.
இதேபோல் கடந்த ஆண்டு மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவைப் போலவே ஒரு பெண் இருப்பதாகக் கூறி வைரலாக்கினர் நெட்டிசன்கள்.
Xerox ♥️?? pic.twitter.com/N3MEoPz35A
— HBD Thangachi Loga ??மச்சக்கன்னி ❣ (@zoya_offcl) June 2, 2020
டிக்டாக் செயலியால் பல்வேறு தீமைகள் இருப்பதாக பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு இருந்தாலும் இன்றைய இளம் தலைமுறையினரின் பொழுதுபோக்கு அம்சமாக மாறியிருக்கிறது.
மேலும் திரைப்பட வசனங்களுக்கும் காட்சிகளுக்கும் தங்களையே நடிகர்களாக பாவித்து வீடியோ வெளியிடும் சிலருக்கு திரைத்துறை வாய்ப்புகளும் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.