தூக்கத்தை கெடுத்த சுனைனாவின் மிரர் செல்ஃபி

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. அதையடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை, தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இப்படி ஹீரோயின் ரோல் மட்டுமல்லாது கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட மிகச்சரியாக பயன்படுத்தி கொண்ட சுனைனா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்த்த படங்களை தேர்வு செய்து நடிப்பதிலும் மிக கவனமாக இருந்து வருகிறார். அந்தவகையில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் “ட்ரிப்” என்ற படத்தில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினாள் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுனைனா கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மற்ற நடிகைகள் வெளியிடும் அளவிற்கு இது ஒன்று அவ்வளவு கிளாமராக கூட இல்லை ஆனால், இதற்கே இணையவாசி ஒருவர் இன்னைக்கு நைட் தூக்கம் வராது போலயே என கமெண்ட் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

20/07/2020

A post shared by Sunainaa (@thesunainaa) on