பணமில்லாமல் வறுமையில் தவிக்கும் பருத்தி வீரன் புகழ் பிரபல பாடகி!

ஊரோரம் புளியமரம் என்ற பருத்தி வீரன் படத்தின் கிராமிய பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இப்பாடலில் திருநங்கைகள் மத்தியில் நடிகர் கார்த்தியுடன் ஆடிக்கொண்டே பாட்டு பாடி பிரபலமானவர் மதுரை காரியாபட்டி லட்சுமியம்மாள்.

நாட்டுபுறப்பாட்டு, தாலாட்டு, கும்மி, ஒப்பாரி கோவில் திருவிழா என பாடி வந்தவர் பருத்திவீரன் படத்திற்கு பின் சினிமா வாய்ப்புகளை அதிகம் பெற்றார்.

1000க்கணக்கான கட்சேரிகளில் பாடி வந்தவர் கடந்த 2016 முதல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் சம்பாதித்த பணத்தை மருத்துவ சிகிச்சைக்கே செலவழித்துவிட்டாராம். பின் குணமாகிவிட்டார்.

தற்போது வயது முதிர்வின் காரணமாக சிகிச்சை பெறவேண்டிய கட்டாயத்திலும், பணமில்லாமலும் தவிக்கிறாராம்.

இந்நிலையில் சாப்பாடு சாப்பிடக்கூட நேரமில்லாமலும் ஓய்வில்லாலும் பாடியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், முன்பு போல குரல் வளம் இல்லை என்றும், மகன்கள் சாப்பாடு போடுவார்கள், ஆனால் சிகிச்சைக்கு பணமில்லை, வாங்கிய விருதுகளை கூட வீட்டில் வைக்க இடமில்லை என அவர் கூறியுள்ளார்.