யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் ஸ்ரீதரன், சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் தெரிவு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் சி.ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மகேசன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டநிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.மகேசன் மேற்கண்ட விபரத்தைவெளியிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில், சிவஞானம் ஸ்ரீதரன் அதிகூடிய விருப்பு வாக்குகளாக 35,784 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதையடுத்து, எம்.ஏ.சுமந்திரனுக்கு 27,834 விருப்பு வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சித்தார்த்தன் 23,740 விருப்பு வாக்குகளையும், சசிகலா 23,098 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். அத்துடன், ஈ.சரவணபவன் 20,392 வாக்குகளையும் ஆர்னோல்ட் 15,378 வாக்குளையும் தபேந்திரன் 5,952 வாக்குளையும் பெற்றுள்ளனர்.