தமிழ் அழகியான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.
தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.
பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
நாடோடிகள் படத்தின் தொடர்ச்சியாக இது இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இயக்குனர் சமுத்திரகனி தன்னுடைய சொந்த அரசியல் விருப்பு, வெறுப்புகளை திணித்து ரசிகர்களை சோதித்து விட்டார்.
இதனால், அடுத்த ஏதாவது ஒரு ஹிட் படம் கிடைக்கும் என காத்திருக்கிறார் அதுல்யா. சமீபத்தில் மழையில் நினைந்த இவரின் புதிய புகைப்படங்கள் சில இணையதளத்தில்வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.