பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சற்று மோசமடைந்திருந்தது.
அவர் விரைவில் மீண்டு வர வேண்டி, சினிமா பிரபலங்கள் உட்பட இசை ரசிகர்கள் பலர் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் படி அவருக்கு கொரோனா தொற்று நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளது.
மேலும், அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.