மாதவிடாய் சீராக வரவில்லையா?

மாதவிடாய் சீராக வராமல் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ, அல்லது கால தாமதமாக வந்தாலோ உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பதாக அர்த்தம்.

ஏதாவது ஒரு தடவை வந்தால் அதற்கு பருவ கால மாற்றம் அல்லது வேற ஏதாவது பிரச்சனைகள் என்று சொல்லிவிடலாம். ஆனால் எப்போதும் இப்படி சீரற்ற மாதவிலக்கு வந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது சிறந்தது.

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி, டயட் என இருக்கும்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவு மிகக் குறைவாக காணப்படும். கொலஸ்ட்ரால் பாலின ஹார்மோன்கள் சுரக்க இன்றியமையாதது. கொலஸ்ட்ரால் குறைவால் ஈஸ்ட்ரோஜன் சரியாக சுரக்காமல் போகும். இதனால் சீரற்ற மாதவிடாய் தோன்றலாம்.

தைராய்டு பிரச்சனை, மன வியாதிக்கு என எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மாத விடாய் சுழற்சிக்கு இடையூறு விளைவிக்கும். மருந்துக்களின் வீரியமும் ஹார்மோன் மாற்றங்களுக்கு காரணமாகலாம்.

கொலஸ்ட்ரால் ஹார்மோன் உற்பத்திக்கு தேவைதான். ஆனால் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது, ஹார்மோன்களுக்கு இடையே சம நிலையற்ற நிலை உருவாகிவிடும். இதுவே மாதவிடாய் பிரச்சனைகளை உண்டு பண்ணும்.

மன அழுத்தம் தரக் கூடிய ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாகும்போது, அது பலப் பிரச்சனைகளை உண்டாகும். அதிலொன்று சீரற்ற மாதவிடாய். மன அழுத்தம் இனப்பருக்க மண்டலத்தை பாதிக்கும்.

ஏன் இரத்தம் கருப்பு நிறத்தில் வருகிறது?

கருப்பை சுவர் மெல்லியதாகவோ அல்லது பலவீனமாக இருப்பதால் மாதவிடாய் இரத்தம் அடர் அல்லது கருப்பு நிறத்தில் கெட்டியாக வெளிவருகிறது.

உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டாம். சில வீட்டு வைத்தியம் செய்தால் போதும்.

மாதவிடாய்க்கு வீட்டு வைத்தியம்

கருஞ்சீரகமும், கருப்பட்டியும்

கருஞ்சீரகத்தை கருப்பட்டி சேர்த்து அரைத்து, மாதவிடாய் காலத்தில் சாப்பிட்டு வந்தால், கருப்பு நிறத்தில் இரத்தம் வெளியேறுவதைத் தடுத்து விடலாம். 3 மாதம் இதை தொடர்ந்து சாப்பிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் சரியாகும்.

உப்பு வைத்தியம்

சூடான நீரில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து, தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் மாதவிடாய் காலத்தில் கெட்டியாக இரத்தம் வெளிவருவது சரியாகும்.

திராட்சை ஜூஸ்

தினந்தோறும் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் 3-4 மாதங்களில் மாதவிடாய் பிரச்சினை குணமாகும்.

குங்குமப்பூ

தினமும் ஒரு கப் பாலில் 2-3 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால் கருப்பைச் சுவர் வலிமையாகும்.

சோம்பு நீர்

தினந்தோறும் 3 வேளை சோம்பு நீரை குடித்து வந்தால் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளும் சரியாகும்.

இஞ்சி டீ

இஞ்சி டீயை மாதவிடாய் காலத்தில் குடித்து வந்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, மாதவிடாய் கால பிரச்சனைகள் குணமாகும்.