போதை பொருள் விவகாரத்தில் சிக்கிய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை சம்பவத்தின் எதிரொலியாக போதை பொருள் விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சினிமா நடிகர்கள், நடிகைகள் சிலர் இச்சர்ச்சையில் சிக்கியுள்ளனர். போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடத்தில் தீவிர விசாரணையும் நடைபெற்றது.

அதே வேளையில் சுஷாந்த் சிங் தற்கொலை மற்றும் போதை பொருள் புழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரின் காதலி ரியா மற்றும் ரியாவின் தம்பி மற்றும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போதை மாத்திரை விற்றதாக ஹிந்தி நடிகர் மற்றும் நடன இயக்குனரான கிஷோர் அமன் ஷெட்டி மற்றும் அவரின் நண்பர் தருண் ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது கன்னட டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அனுஸ்ரீ இச்சர்ச்சையில் சிக்க அவருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு போலிசார் சம்மன் அனுப்ப அவரும் நேற்று ஆஜராக 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது.