நடிகை இனியா சீரியலில் நடிக்கிறாரா?

யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா அறிமுகமானவர் இனியா. அடுத்து இவர் நடித்த வாகை சூடவா படத்திற்கு தேசிய விருது எல்லாம் கிடைத்தது.

அதற்கு பின்னர் மௌனகுரு, அம்மாவின் கைபேசி, கண்பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், நினைத்தது யாரோ, புலிவால், நான் சிகப்பு மனிதன், கோடிட்ட இடங்களை நிரப்புக, பொட்டு ஆகிய படங்கள் நடித்தாலும் அவ்வளவாக ரசிகர்கள் மத்தியில் இவர் பேசப்படவில்லை.

இந்த நிலையில் இனியா ஒரு முயற்சியில் இறங்கியுள்ளார், அதாவது பட வாய்ப்புகள் குறையவே சீரியல் பக்கம் திரும்பியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியான கண்ணான கண்ணே சீரியலில் கமிட்டாகி இருப்பதாகவும், அதில் இவர் வில்லியாக நடிக்கிறாராம். தற்போது சீரியலுக்கான படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.