தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை இப்படி தான் உள்ளதா? செயலாளர் வெளியிட்ட தகவல்.. !!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 22ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, ஏற்கனவே விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது, மருத்துவமனையில் விஜயகாந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்லப்படுவர் என்று துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டார் என்றும், இன்று டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிக தொண்டர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.