மேடையில் காதல் மனைவியைக் கட்டிப்பிடித்து துள்ளிக் குதித்த எஸ்பிபி…!!

 மறைந்த பாடகர் எஸ்பிபி மேடை நிகழ்ச்சியின் போது தனது மனைவியை கட்டிப்பிடித்து, அறிமுகப்படுத்தி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த காட்சி தீயாய் பரவி வருகின்றது.

பாடகி ஜானகியுடன் மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எஸ்பிபி, இடையில் தன்னிடம் பாடல் நோட்டை கொடுக்க வந்த தனது மனைவியை பாசத்துடன் கட்டியணைத்து மகிழ்ச்சியினை வெளிக்காட்டினார்.

அப்போது பாடகி ஜானகி, எஸ்பிபியின் மனைவி என்று கூறினார். மேலும் எஸ்பிபி, பாடகி ஜானகி தனது கையில் வைத்திருக்கும் சிறிய பாடல் புத்தகத்தினை மேற்காட்டி நகைச்சுவை செய்தது மட்டுமின்றி, இறுதியில் தனது மனைவியின் பெயரைக் குறித்து துள்ளிக் குதித்த காட்சியே இதுவாகும்.