அஜித் வந்தால் என்ன வரவில்லை என்றால் என்ன?

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 25ம் தேதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

அவரது உடல் அவருக்கு சொந்தமான இடத்தில் சகல மரியாதையுடனும், காவல் துறை மரியாதையுடனும் அடக்கம் செய்யப்பட்டது.

அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திடீரென இறுதி நேரத்தில் விஜய் இறுதி மரியாதை செலுத்தினார். உடனே அஜித் வராதது ஏன் என பலர் பேச ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. சரண், அஜித் எனக்கு நல்ல நண்பர், அவர் வந்தால் என்ன, வரவில்லை என்றால் என்ன?.

இந்த மாதிரி சூழலில் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை, இப்போது இதை பற்றி பேச வேண்டியதுமில்லை.

உலகில் என் அப்பா இல்லை, எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் இல்லை அவ்வளவுதான் என பேசியுள்ளார்.

https://youtu.be/o6aw6C8naG0