தமிழில் களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஓவியா, திரைப்படங்களில் நடித்ததை விட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்ட ஓவியாவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் குவிந்தனர் என்றே கூறலாம்.
அந்த வகையில் அவரின் தீவிர ரசிகர்களில் ஒருவரான சான்வி என்பவர் திடீரென சமீபத்தில் மரணமடைந்துள்ளார், மேலும் அவரின் மிக ஆசையே நடிகை ஓவியாவை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்பது தான்.
இந்த தகவலை அறிந்த நடிகை ஓவியா “சான்வியின் பெற்றோர்களை தான் சந்திக்க விரும்புவதாகவும், அவர்களை தொடர்புகொள்ள தனக்கு யாராவது உதவுங்கள்” என கூறியுள்ளார்.
Hai dear @OviyaaSweetz one of your die hard fan is no more 💔 😭..
She once said " saagra kulla ungala paakanum nu " #RipSanvi pic.twitter.com/gTp9DRecYQ— OviyaArmy 🔥 (@oviyaasweetzs) September 27, 2020