திரிஷாவின் முன்னாள் காதலர் மீது போலிசார் அதிரடி நடவடிக்கை!

நடிகை திரிஷா தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின் பிரிந்துவிட்டனர். காவியதலைவன், வாய் மூடி பேசவும் ஆகிய படங்களையும் வருண் மணியன் தயாரித்திருந்தார். சென்னை நந்தனத்தில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் மீது அயனம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேஷன் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதில் வருண் மணியனின் நிறுவனித்திடமிருந்து இரண்டு பிளாட்டுகள் வாங்குவதற்காக ரூ 2 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் முழுத்தொகையும் கொடுக்காததால் தன்னிடம் தெரிவிக்காமலேயே வருண் வேறொருவருக்கு அந்த பிளாட்டை விற்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் வெங்கடேசன் அட்வான்ஸ் பணத்தை திரும்பி கேட்க வருண் கொரோனா காலமாக இருப்பதால் திருப்பி தர காலதாமதமாகிறது என கூறியுள்ளார். பின் பணத்திற்காக மீண்டும் அலுவலகம் சென்ற போது வாக்குவாதம் செய்து அவர் தன்னை மிரட்டுகிறார் என புகார் அளித்துள்ளார்.

ஆனால் போலிஸ் விசாரணையில் வெங்கடேசன் பிளாட்டுகளை புக் செய்துவிட்டு வேண்டாம் என ரத்து செய்துவிட்டார் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார் வருண். இதனால் அவர் மீது நம்பிக்கை மோசடி, பணமோசடி, மிரட்டல் என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.