கொரோனா தொற்றுக்குள்ளான ஐவர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓட்டம்!

கொரோனா தொற்றுக்குள்ளான ஐவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.

இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

அதன்படி, பொலன்னறுவை-கல்லேல பகுதியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் 05 பேரே இன்று காலை தப்பிச்சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.