பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் ஆரியை பற்றி கூச்சலிட்ட மக்கள்; பேச்சை நிறுத்திய கமல்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி வாரத்தை எட்டி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையடுத்து, கமலஹாசன் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த 3 தினங்களாக தொடர்ந்து வருகிறார்.

இதற்காக மதுரை, தேனி, விருதுநகர், திருவண்ணாமலை, விழுப்புரம் என்று பல்வேறு விருதுநகர், பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் பிரச்சாரம் மேற்கொண்டும் வருகிறார்.

மேலும், செல்லும் இடமெல்லாம் தனக்கு மக்களின் ஆதரவு இருப்பாதகவும் கூறி இருந்தார்.

இந்த நிலையில், நடிகர் கமல் பிரச்சாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டத்தில் இருந்து பிக் பாஸ் பற்றிய கேள்விகள் வந்துகொண்டு இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட கடந்த சென்ற கமலிடம் மக்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர் ”அனிதா சம்பத் போவாளா எப்படி’ என்று கேட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

இதனிடையே, தற்போது சமீபத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற கமலிடம் மக்கள் கூட்டத்தில் இருந்து சிலர், ஆரி, ஆரி என்று கோஷமிட்டதால் கமல் சற்று நேரம் பேச்சை நிப்பாட்டி என்னவென்று கேட்ட போது பிக் பாஸ் என்று கோஷமிட்டுள்ளனர்.

அதன்பின்னர், தனது பேச்சை மீண்டும் துவங்கினர் கமல். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், இதன் மூலம் ஆரிக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது.