டிக்டாக் மூலமாக புகழ் பெற்ற கேப்ரியல்லா சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடரில் நடிகையாக நடிக்க இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டு இருக்கின்றார். இதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து இருக்கின்றனர்.
டிக் டாக் செயலி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா செல்லஸ் ஆவார். இவர் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், வெளியான ஐரா என்ற திரைபடத்தில் சிறு வயது நயன்தாராவாக நடித்து வெள்ளித்திரையில் கால் பதித்தார்.
இத்தகைய சூழலில்., தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சுந்தரி எனும் சீரியலில் கதாநாயகியாக நடிக்க இருக்கின்றார். இது குறித்த தகவலை நடிகை கேப்ரில்லா செல்லஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். இதன் காரணமாக அவருடைய ரசிகர்கள் உற்சாம் அடைந்து இருக்கின்றனர்.