உலக மக்களிடம் நடனத்தில் சிறந்தவர் யார் என்றால் மைக்கெல் ஜாக்சன் என்பார்கள்.
ஆனால் தமிழ்நாட்டு மக்களிடம் ஏன் இந்திய மக்களிடம் கேட்டால் அவர்கள் முதலில் கூறுவது பிரபுதேவா என்று தான்.
தனது நடனத்தால் எல்லோரையும் கட்டிப்போட்டவர் பிரபுதேவா.
100 படங்களுக்கு மேல் பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடன இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் கலக்கியுள்ளார்.
அண்மையில் இவரைப்பற்றி ஒரு பரபரப்பு தகவல் வந்தது. அதாவது பிரபுதேவா மும்பையில் தனக்கு நல்ல தோழியான ஹிமானி என்பவரை கடந்த வருடம் சிம்பிளாக திருமணம் செய்துகொண்டார்.
அவர்களது திருமண செய்தியை ராஜு சுந்தரம் அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
மொட்டை அடித்து ஆளே மாறியுள்ளார், அவருடன் எடுத்த புகைப்படங்களை நடிகை சார்மி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
View this post on Instagram