இந்த ஆடம்பரம் தேவையா? கவர்ச்சி உடையில் தண்ணீரில் மிதந்த ஷிவானி!

பிரபல ரிவி சீரியலின் மூலம் ரசிகர்களை கொள்ளையிட்ட ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு மேலும் பிரபலமானார்.

தனது இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார்.

அந்நிகழ்ச்சியில் பாலாவுடன் கிசுகிசுக்கப்பட்டு பிரபலமான அவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வித விதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாலத்தீவு கடற்கரையில் கவர்ச்சியான உடையணிந்து நீருக்குள் இருந்த படி அவரது முன்பு பலவகையான உணவுகள் வைக்கப்பட்டுள்ள காட்சியினை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

ஆனால் இந்த புகைப்படத்தினை சிலர் ரசித்து வந்தாலும், பலர் திட்டித் தீர்த்து வருகின்றனர். எத்தனையோ பேர் பட்டினியாக இருக்கும் போது, பணத்தினை எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்று தெரியாமல் இப்படி ஆடம்பரமாக செயல்படுகின்றனர் என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.