அநாகரிகமாக நடந்துகொண்ட இலங்கை முன்னாள் உலக அழகி கைது!

2021ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பில் கடந்த் ஆண்டின் திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி மற்றும் மொடல் அழகி சுலா பத்மேந்திரா ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள புஷ்பிகா டி சில்வா, கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் கரோலின் ஜூரிக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.

திருமதி இலங்கை அழகி போட்டியில் புஷ்பிகாவுக்கு முடிசூட்டப்பட்டு சிறிது நேரத்தில் வெற்றியாளர் விவாகரத்து செய்யப்பட்டவர் என்றும் அத்தகைய ஒருவர் இதில் போட்டியிட முடியாது எனவும் கூறிய கரோலின் ஜூரி, இரண்டாவது வெற்றியாளர், முதலாவது வெற்றியாளராக தெரிவு செய்யப்படுகிறார் என அறிவித்து புஷ்பிகா டி சில்வாவின் தலையில் இருந்த கிரீடத்தை எடுத்து இரண்டாவது வெற்றியாளருக்கு அணிவித்திருந்தார்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்ததுடன் கரோலின் ஜூரியின் செயலுக்கு பலரும் கண்டங்களை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட அழகி புஷ்பிகா டி சில்வா, தான் விவாகரத்தானவர் இல்லை என அறிவித்ததுடன் பொலிஸிலும் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜீரியின் இந்த அறிவிப்பு உண்மைக்கு புறம்பானது என ஏற்பாட்டுக்குழு விளக்கம் அளித்ததோடு, பின்னர் புஷ்பிகாவை வெற்றியாளராக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திரா ஆகியோர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது. கிரீடம் கழற்றும் போது தனக்கு தலையில் காயம் ஏற்பட்டது என புஷ்பிகா டி சில்வா மருத்துவ அறிக்கை சமர்ப்பித்தார்.

இதையடுத்து, கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.இந்நிலையில், ஜீரியின் இந்த அறிவிப்பு உண்மைக்கு புறம்பானது என ஏற்பாட்டுக்குழு விளக்கம் அளித்ததுடன் புஷ்பிகாவை வெற்றியாளராக மீண்டும் அறிவித்திருந்தது.

சம்பவம் தொடர்பில் இன்று காலை கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திரா ஆகியோர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது

இதையடுத்து, கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாம் இணைப்பு

கரோலின் ஜூரி பிணையில் விடுதலை

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திர ஆகிய இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திருமதி இலங்கை அழகிப்போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள புஷ்பிகா டி சில்வா, கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் கரோலின் ஜூரிக்கு எதிராக மேற்கொண்டிருந்த முறைப்பாட்டிற்கு அமைவாக இருவரும் இன்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து இருவரிடமும் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து பொலிஸ் பிணையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், இருவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.