நித்தியானந்தாவின் புதிய வேடம்

பல்வேறு புகாரில் சிக்கி சின்னாபின்னமாகி தலைமறைவாகி இருப்பவர் நித்யானந்தா சாமியார்.

இவர் கைலாசம் என்ற நாட்டை உருவாக்கி அதில் தான் வசிப்பதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது குறித்து அவ்வப்போது வீடியோ மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். கைலாசா நாட்டிற்கு என்று தனியாக கரன்சிகள், தங்க நாணயங்கள் மற்றும் தனி ரிசர்வ் பேங்க் உள்ளதாக அதிரடி அறிவிப்பையும் நித்யானந்தா வெளியிட்டார்.

அத்துடன் இவர் ஏற்கனவே தன்னைத்தானே தான் கடவுள் என்றும் தான் சிவனின் அவதாரம் என்றும் கூறிக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது முகநூல் பக்கத்தில் திருப்பதி ஏழுமலையான் போல் காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதுடன்

பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவதற்கு போன்றும் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

மேலும் தன்னை வணங்கினால் நிதி நெருக்கடியில் இருந்து வெளியே வந்து ஏராளமான செல்வங்கள் பெறலாம் என்றும் நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் நித்தியின் இந்த செயல் ஏழுமலையான் பக்தர்களை கடும் சினத்திற்குள்ளாக்கியுள்ளது.