ஐதராபாத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த வங்கி ஊழியர் மற்றும் பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகள்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குகட்பல்லி பகுதியில் எச்.டி.எப்.சி. தனியார் வங்கி ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. அங்கு, வழக்கம்போல் பாதுகாவலர் உதவியுடன் வங்கி ஊழியர் பணம் நிரப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், வங்கி ஊழியர் மற்றும் பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு கண் இமைக்கும் நேரத்தில் பணத்தை அள்ளிக் கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குண்டடி பட்டு கிடந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், பாதுகாவலர் அலி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.அவரது வயிற்றில் குண்டு பாய்ந்ததால் அவருக்கு அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
பாதுகாவலர் மீது பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளபகுதியில் பட்டபகலில் துப்பாக்கி சூடு நடத்தி கொளளை நடந்துள்ளது.இதனால் அந்த பகுதில் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.