மொட்டை மாடியில் 4½ வயது சிறுமியை 6 இளைஞர்கள் செய்த கொடூரம்..

மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை 6 இளைஞர்கள் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய இளம்பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனையடுத்து தினமும் அவரது மகளான 4½ வயது சிறுமி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று விளையாடுவது வழக்கம்.

இந்தநிலையில், சம்பவத்தன்று மாலை சிறுமி மொட்டை மாடிக்கு சென்று விளையாடியுள்ளார். அப்போது இவர்கள் வீட்டின் கீழ் பகுதியில் வசிக்கும் சையத் அக்ரம் என்பவரும் அவரது நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து சிறுமியை வன்கொடுமை செய்துள்ளனர்.

அத்தருணத்தில் சிறுமியை காணவில்லை என்று அவரது தாய் தேடிக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது, குழந்தைக்கு அரங்கேறிய நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில், வழக்கு பதிவுசெய்த பொலிசார், சையத் அக்ரம், அப்துல் முகமது யாகூப், நாகூர் கனி, யூசுப் அன்சாரி, சுலைமான், விஜயராகவன் ஆகிய ஆறு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.