வெள்ளத்தில் சிக்கிய கொரோனா நோயாளர்களை மீட்கும் இராணுவத்தினர்… வெளியான தகவல்!

அத்தனகல பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் கொரோனா சிகிச்சை மையத்திற்கு செல்ல முடியாத இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த கோவிட் நோயாளிகளை இலங்கை இராணுவத்தினர் மீட்டு சிகிச்சை மையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

இந்த நபர்கள் கோவிட் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டனர், ஆனால் பல நாட்கள் அவர்கள் வீடுகளில் சிக்கிக்கொண்டனர், வெள்ளம் காரணமாக சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

நேற்று அவர்கள் சிகிச்சை நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.