யாழ்.மாவட்டத்தில் 50 பேர் உட்பட வடக்கில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
நேற்றய தினம் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலை மருத்துவபீட பரிசோதனை கூடங்களில் 632 பேருக்கு செய்யப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகளில் வடக்கில் 59 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை – 10, தெல்லிப்பழை வைத்தியசாலை – 01, பருத்தித்துறை வைத்தியசாலை – 06, மானிப்பாய் வைத்தியசாலை – 08, பண்டத்தரிப்பு வைத்தியசாலை – 02, காரைநகர் சு.வை.பிரிவு – 02,
உடுவில் சு.வை. பிரிவு – 04, யாழ்ப்பாணம் சு.வை. பிரிவு – 03, சண்டிலிப்பாய் சு.வை. பிரிவு – 02, வசாவிளான் – 12 புதுக்குடியிருப்பு வைத்தியசாலை – 01, இரணைமடு – 02, பெரியகாடு – 02, வெள்ள முள்ளிவாய்க்கால் – 01, மன்னார் வைத்தியசாலை – 03