யாழ்ப்பாணத்தில் கேக் வெட்ட ஒன்று கூடிய நண்பர்கள்; திடீரென புகுந்த கும்பலால் பரபரப்பு

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயிலடியிலுள்ள குளிர்களி நிலையமொன்றில் இளைஞர்கள் குழு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது வாளுடன் நுழைந்த ரௌடிக்குழுவொன்று நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது.

யாழில் தற்போது வாள்வெட்டு சம்பவம் அதிகரித்து செல்லும் வேளை இன்றும் ஒரு சம்பவம் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. நாச்சிமார் கோயிலடியில் ராஜா கிறீம் கவுஸின் வெளிப்புறத்தில் இன்று மாலை சுமார் 10 வரையான இளைஞர்கள் குழு கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட தயாராகியது எனவும் .

மோட்டார் சைக்கிளில் கேக் வைக்கப்பட்டிருந்தது எனவும் அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த 4 பேர், கேக்கை வாளால் வெட்டி சேதப்படுத்தினர்.

மேலும் இதில் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது. அந்தக்குழு நுழைந்ததும் இளைஞர்கள் தலைதெறிக்க தப்பியோடி விட்டனர் எனதெரியவந்துள்ளது.

அட்டூழியத்தில் ஈடுபட்ட அந்தக் குழு , கேக் வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டனர் என குறிப்பிடப்படுகின்றது.