மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் இலங்கையை முடக்குவதால் மாத்திரம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணா்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவுவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் டெல்டாவிற்கு எதிராக போராடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.