நீர் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சாதாரண நுகர்வோரின் கட்டணத்தை அதிகரிக்காமல் நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் வருவாயை வேறு வழிகளில் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.