ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள்… மீண்டும் ஆரம்பம்

கொவிட் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களிலும் இன்று முதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கமைவாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எனினும் மறுஅறிவித்தல் வரை ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்படாதென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுகாதார வழிகாட்டல்களுக்கு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

கையடக்க தொலைபேசி மூலம் 225-க்கு அழைத்து நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.

அதேபோல, 1225 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அழைப்பை மேற்கொண்டு முன்பதிவு செய்துகொள்ள முடியும்.