ஹேமா தான் உன் புள்ள… அப்பட்டமாக போட்டுடைத்த மாமியார்.! அதிர்ந்துபோன கண்ணம்மா.!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் முக்கியமானது என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான். இந்த தொடர் பல இல்லத்தரசிகளுக்கும் பிடித்தமானதாக அமைந்தது.

இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை ரோஷினி ஹரி பிரியன். சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலமாக அவர் நிறைய ரசிகர்களை பெற்றார். இவரது கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு மட்டும் நிறைய ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருகிறார். இதில் ஒரு குழந்தை அவருடனும், மற்றொரு குழந்தை அவருக்கே தெரியாமலும் வளர்ந்து வருவதாக இத்தனை நாட்கள் காட்டப்பட்டது. தனது குழந்தையை கண்டுபிடிக்க கண்ணம்மா நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.


இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில், வெண்பா இரண்டாவது குழந்தை வேண்டும் என்றால் டைவர்ஸ் நோட் கையெழுத்து போட சொல்லுகிறார். எதார்த்தமாக கண்ணம்மா வீட்டிற்கு வரும் சௌந்தர்யா டைவர்ஸ் நோட்டீஸ் பார்த்துவிட அவர் அதனை வாங்கி கிழிக்க முயற்சிக்கிறார்.

அப்போது கண்ணம்மா எனது மற்றொரு குழந்தை வேண்டும் எனவே விவாகரத்து செய்வது அவசியம் என்று சௌந்தர்யாவிடம் சண்டையிடுகிறார். அப்பொழுது சௌந்தர்யா உனது இன்னொரு குழந்தை ஹேமா தான் என்று உண்மையை தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது. வழக்கமாக இது போன்ற உண்மையை வெளிக்கொண்டு வருவது போன்ற காட்சிகளை புரோமோ வில் வெளியிட்டுவிட்டு, பின்னர் இதனை கனவு போல காட்டுவதை வாடிக்கையாக தொலைக்காட்சியினர் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.