இலங்கையில் நீர் கட்டண தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதன் படி தற்போது நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தற்போது வரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

செலவு, வரவை விட அதிகரித்துள்ளமையினால் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கடுமையாக பொருளாதார செருக்கடியை சந்தித்துள்ளதாக அந்தச் சங்கத்தின் பொது முகாமையாளர் திலி ண விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் சீர் செய்யாவிட்டால் நீர்கட்டணத்தை அதைக்கரைப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்திடம் இருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது நூற்றுக்கு 45 சதவீதம் நீர் விநியோகம் இடம்பெற்று வருகிறது. அதனை அடுத்த 4 வருடங்களில் 80 சதவீதமாக உயர்த்துவதே தனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.