தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் முதல் முறையாக பார்வைக்கு விடப்பட்ட அன்னங்கள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 86 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 22 ஆம் திகதி பிறந்த குறித்த அன்னப் பறவைகள், கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை.

அவுஸ்திரேலியாவுக்கு உரித்தான இந்த ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள் தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வசித்து வருகின்றன.

இந்நிலையில் புதிதாகப் பிறந்த அன்னப்பறவைகளில் மூன்று ஆண் பறவைகளும், இரண்டு பெண் பறவைகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வெளிநாடுகளில் இருந்து பல விலங்குகள் கொண்டுவரப்பட்டு மக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

மேலும் இதில் அதிக விஷம் கொண்ட பாம்புகளும் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.