ஒமிக்ரோன் தடுப்பூசிகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்

தற்போது உலகத்தை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் தொற்றுக்கு எதிராக பைஸர் மற்றும் அஸ்ராசெனகா ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் குறைவான செயல்திறனையே கொண்டிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கோவிட் வைரஸ் திரிபான ஒமிக்ரோன் உலகை அச்சுறுத்து வருகிறது.

90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் திரிபானது முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களையும் தாக்குகிறது. இதனால் தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி இந்த புதிய வைரஸுக்கு எதிராக செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் பைஸர் மற்றும் அஸ்ராசெனெகா ஆகிய 2 தடுப்பூசிகளும் ஒமிக்ரோன் திரிபுக்கு எதிராக குறைவான செயல்திறனை கொண்டிருக்கின்றமை ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பைஸர் அல்லது அஸ்ட்ராசெனெகா ஆகியவற்றின் 2 தடுப்பூசிகளை ஏற்றியபிறகு, டெல்டாவுடன் ஒப்பிடும்போது, ஒமிக்ரோனுக்கு எதிராக அவற்றின் செயல்திறன் குறிப்பிடத் தக்க அளவில் குறைவதை இங்கிலாந்தின் ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும் பைஸர் தடுப்பூசியின் செயலூக்கிதடுப்பூசியை செலுத்தி கொண்ட 2 வாரங்களுக்குப் பிறகு அதிக செயல்திறன் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.