விக்ரம் பட வெற்றியை அடுத்து சம்பளத்தை உயர்த்திய அனிருத்

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி தற்போது இசை அமைப்பாளராக திகழ்பவர் தான் அனிருத்.

இவரது இசையில் வெளியான பல்வேறு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது விக்ரம் படம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றியை பெற்று வருகிறது.

இதுவரை, அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பணியாற்றி இவருக்கு தற்போது மார்க்கெட் உயர்ந்துள்ளது.

இதற்கு முன்னதாக இவர் இசையமைத்து வந்த படங்களுக்கு ரூபாய் 2 கோடி சம்பளமாக வாங்கி வந்த நிலையில் விக்ரம் படத்திற்கு 4 கோடி ரூபாயாக சம்பளம் வாங்கி உள்ளார்.

மேலும், அனிருத் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி இருப்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதேப்போல் இதுவரை இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த லோகேஷ் கனகராஜ் அவர்களில் விக்ரம் படத்தில் இருந்து தன்னுடைய சம்பளத்தை 4 கோடியாக உயர்த்தி உள்ளார் .