வெளிநாட்டில் சித்திரவதை அனுபவிக்கும் இலங்கை பெண்!

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணி புரிந்த இலங்கை பெண் ஒருவர் கடும் சித்திரவதைக்குள்ளாகியுள்ளார்.

தனது சேவைக் காலம் முடிவதற்குள் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளரினால் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதால், தன்னை விரைவில் இலங்கைக்கு அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உரிமையாளரினால் சித்திரவதை
ஹொரவ்பொத்தானை – வில்லேவாவ பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய இந்த பெண், ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்றுள்ளார்.

எனினும், தான் பணி புரியும் வீட்டின் உரிமையாளர்கள் தம்மை பல்வேறு வகைகளில் சித்திரவதை செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.