சரிகமப நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சி உலகவாழ் தமிழ் மக்கள் மிகவும் விரும்பி பார்க்கும் நிகச்சியாக உள்ளது. 3 சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்போது சீசன் 4 இல் சரிகமப நிகழ்ச்சி வெற்றிகரமாக பயணிக்கின்றது.

சரிகமப நிகழ்ச்சிக்கு தமிழகத்தை தாண்டியும் பல ரசிகர்கள் உள்ளனர். காரணம் வெளிநாடு வாழ் தமிழர்களும் போட்டியாளர்களாக இதில் கலந்துகொள்வதே ஆகும்.

இந்நிலையில் தற்போது Dedication Round இல், போட்டியாளராக கலந்து கொண்ட சரத் சார்ஸ் தனது அம்மாவிற்காக பாடிய பாடல் பலரையும் உருகவைத்துள்ளது.

அம்மா என்றழைக்காத பாடலை அவர் பாடிக்கொண்டிருக்கையில், பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தாய் மேடைக்கு வர அரங்கத்தில் இருந்த அனைவரும் கண்கலங்கும் காணொளி வெளியாகி ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.