நாளை தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது.

இதனிடையே ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் கடந்த 17ஆம் திகதியுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றது.

ஜனாதிபதி தேர்தல்
இந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தொடர்பில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளைய தினம் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பான வர்த்தமானி இந்த வார இறுதிக்குள் வெளியாகும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கமளித்துள்ளார்.