களுத்துறை (Kalutara) வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது, நேற்று (26.08.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
மஹவயிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த தொடருந்து மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.