நாடு முழுவதும் ஆயுதப் படைகளை வரவழைக்க ஜனாதிபதி உத்தரவு!

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மகி ந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய சபாநாயகர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் தேர்தல் ஆணைக்குழுவால் பாதுகாப்பு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.