விவசாயிகளின் கடன் தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள தீர்மானம்!

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

குறித்த தீர்மானம் இன்றையதினம் (03.09.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு விவசாய சங்கத்தினரும் விடுத்த கோரிக்கைகளிற்கு அமையவே இந்தத் தீர்மானம் செயற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையிலும் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.