கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை !

கனடாவில் கல்வி கற்க வந்துள்ள சர்வதேச மாணவர்கள், வாரம் ஒன்றிற்கு 24 மணி நேரம் மட்டுமே பணி செய்ய அனுமதி என கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்கள், கல்வியில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் கவலை
எனினும் , வேலை செய்வதற்கு கட்டுப்பாடு விதிப்பது தம்மை பொருளாதார ரீதியாக பாதிக்கும் என்கிறார்கள் மாணவர்கள். இந்நிலையில் ஆசிய நாடுகளில் இருந்து கனடா சென்றுள்ள மாணவர்கள் இதனால் பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக வெளிநாட்டு மாணவர்கள் தமது வாழ்வாதாரத்திற்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.