யாழில் தனக்கு தானே தீ வைத்தவர் உயிரிழப்பு!

தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக தனக்கு தானே தீ மூட்டினார் என கடந்த 03ஆம் திகதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.