இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் போது உச்சளவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவித்தலை பொலிஸ் தேர்தல் காரியாலயம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, வாக்கு பெட்டி எடுத்துச் செல்லும் வாகனம் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு ஆயுதம் தரித்த இரு பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த வாகனங்களின் முன்னாலும் பின்னாலும் பொலிஸ் வாகனங்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.