ரத்த புற்றுநோயை குணமடைய செய்யும் அறுகம்புல் யூஸ்

பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் பழக்கங்களில் முறையான உணவு பழக்கங்களும் ஒன்று.

உணவு பழக்கங்கள் சீராக இருக்கும் பட்சத்தில் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும்.

முந்தைய காலத்திலுள்ள மக்கள் ஏதாவது தீராத நோய்கள் வந்தால் மாத்திரமே மருத்துவமனைக்கு செல்வார்களாம். நமது சூழலில் இருக்கும் காய்கறிகள் மற்றும் மூலிகைகளை வைத்து சில நோய்களை முழுமையான குணப்படுத்தியுள்ளார்களாம்.

இதன்படி, நாள்ப்பட்ட தீராத நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளில் ஒன்றாக அருகம்புல் பார்க்கப்படுகின்றது.

இதில் ஜூஸ் செய்து அருந்தினால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

அப்படியாயின் அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

அருகம்புல் ஜீஸ் குடித்தால் என்ன நடக்கும்?

1. அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ நலன்களுக்காக பயன்படுகின்றது. இதனால் அருகம்புல்லில் ஜீஸ் செய்து குடித்து வந்தால் ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரிகள் கிட்டக் கூட வராது.

2. சிறுநீர்ப்பையில் கல் பிரச்சியுள்ளவர்கள், உடல் வீக்கம், குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, மூக்கில் ரத்தக்கசிவு, ஜலதோஷம், வயிற்று போக்கு, கண்பார்வை போன்ற பிரச்சினையுள்ளவர்களுக்கு அருகம்புல் வேரில் வைத்தியம் செய்யலாம். அத்துடன் மூளையில் ஏற்படும் ரத்த கசிவுகளுக்கும் இதில் தீர்வு உள்ளது.

3. உடல் எடை குறைப்பு, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இதய கோளாறு, தோல் வியாதிகள் உள்ளிட்ட நாற்ப்பட்ட நோய்களுக்கு அருகம்புல் ஜீஸ் சிறந்த மருந்தாக உள்ளது.

4. சிலர் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக அடிக்கடி ஏதாவது ஒரு நோயில் சிக்கிக் கொள்வார்கள். இவர்கள் அருகம்புல் ஜீஸ் குடிக்கலாம். இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கரித்து ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றும் வேலையை செய்கிறது.

5. அருகம் புல் சாறு, தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு எடுத்து தைலம் போல் காய்ச்சி ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு போட்டால் எவ்வளவு காலம் குணமடையலாம் இருந்தாலும் அவை குணமாகி விடும்.

6. தேவையான அளவு அருகம்புல், சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தடவ வேண்டும். இப்படி செய்து சரியாக ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். இது உடலில் தொற்றுக்களால் ஏற்படும் அரிப்பை குணப்படுத்தும்.