தவறான முடிவால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்

திருகோணமலை ஈச்சிலம்பற்று துறை பகுதியில் வீட்டில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம்(08) இரவு இடம்பெற்ற நிலையில் சம்பவத்தில் 35 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பஸ்தர் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.